×

மருத்துவ பரிசோதனை

பழநி, டிச.28: பழநி அருகே பாப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பாப்பம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் ரதிதேவி ரங்கநாதன், துணைத் தலைவர் மாயவன் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். பாப்பம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் டாக்டர் நிவேதிதா முன்னிலை வகித்தார். முகாமில் 876 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 15 பேர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். ஊட்டச்சத்து பணியாளர்கள் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து தொடர்பான அறிவுரைகளை வழங்கினர். ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அப்துல்வகாப், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் ஊராட்சி செயலர் ஏழுமலை உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

Tags : examination ,
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...