×

புதுக்கடை அருகே சூப்பர் மார்க்கெட்டில் ₹1.90 லட்சம் கொள்ளை

புதுக்கடை, டிச.28: புதுக்கடை அருகே ஹெலன் நகர் கடற்கரை கிராம பகுதியில் சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து ₹1 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை  அருகே  ஹெலன் நகர் கடற்கரை கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜாண்பிரிட்டோ  (45) என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவர் கடந்த 24ம் தேதி   இரவு வியாபாரம் முடித்து கடையை அடைத்து விட்டு சென்றுள்ளார். மறுநாள்  கிறிஸ்துமஸ் தினம் என்பதால் கடை திறக்கவில்லை. மீண்டும் நேற்றுமுன்தினம் காலை  கடை திறக்க வந்தபோது, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில்  காணப்பட்டது. உள்ளே சென்று பார்த்த போது, கடையில் வைத்திருந்த 1 லட்சத்து  90 ஆயிரம் ரூபாயை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஜாண் பிரிட்டோ புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : robbery ,supermarket ,Pudukkad ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...