×

டாக்டர் திவாகரன் வழங்கினார் விவசாயிகளின் நண்பன் 1,000 டன் கழிவுகளை 300 டன் எருவாக மாற்றும் மண் புழுக்கள்

மன்னார்குடி, டிச. 28: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூரில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2020- 21கீழ் அமைக்கபட்ட மண்புழு சிமெண்ட் உர படுக்கையினை தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு குறித்து அவர் கூறுகையில், மண்ணுக்கு தாய்ப்பால் இயற்கை எரு. நாம் அதிகளவில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விட இயற்கையில் கிடைக்கும் தொழு உரம், தழை    உரம் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் பயிர்களுக்கும் நிலத்துக்கும் ஏற்றது. இதனை நாம் சுலபமாக தயாரிக்கலாம். பழங்காலத்திலிருந்து மண்புழுவை விவசாயி நண்பன் எனவும், மண்ணின் வளத்தை திரும்ப நிலைநிறுத்தும் உரம் எனவும் அறியப்பட்டு வருகிறது.

சுற்றுப்புறச் சூழலை பாதிக்கக்கூடிய குப்பை கூளங்களை மண்புழு உரம் தயாரிப்பதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள இடங்களை மாசு படாமலும், அதே சமயத்தில் வீணாகும் அங்ககப் பொருட்களை மறுசுழற்சி முறையில் உபயோகப் படுத்தவும் முடியும். இன்றைய காலகட்டத்தில் நிலையான வேளாண்மைக்கு உயிரியல் காரணிகளை மறுசுழற்சிக்கு உபயோகப் படுத்துவது முக்கியமான குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த வகையில் மண்புழு வளர்ப்பு மண்புழு உரம் தயாரிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. நமது வீடுகளில், தோட்டத்தில் தினமும் கிடைக்கும் காய்கறி கழிவுகள் ,தோ ட்டக் கழிவுகள், காகிதக் குப்பைகள் போன்ற இயற்கை கழிவுகளை மண்புழுக் கள் உதவியுடன் இயற்கை உரமாக தயாரிப்பதுதான் மண்புழு உரம் ஆகும். முதலில் மண்புழு தேர்வு செய்தல், மண்புழு பொதுவாக இரண்டு ரகங்கள் தமிழ்நாட்டில் வளர்க்க ஏற்றவையாகும்.

ஒன்று எய்சீனியா பீட்டிடா மற் றொன்று யூடிரலஸ் யூஜினே ஆகிய இரண்டில் ஒன்றினை நாம் தேர்வு செய்யலாம். எரு படுக்கைக்கு தேவையான சாணத்தை 15 நாட்கள் நிழலில் உலர வைத்து தூள் செய்து கொள்ள வேண்டும் இதற்கு சாண எருக்குழியிலிருந்து உலர்ந்த சாண கட்டிகளை தூள் செய்தும் பயன்படுத்தலாம். முதலில் சிமெண்ட் தொட் டியின் அடிப்பாகம் சமமாக இருக்குமாறு பரப்ப வேண்டும். இதன்மீது பதப் படுத்தப்பட்ட குப்பையினை பத்து சென்டிமீட்டர் உயரத்திற்கு பரப்ப வேண்டும். அதன்மேல் மூன்று சென்டிமீட்டர் உலர்ந்த சாணி தூளை பரப்பவும். இதன் மேல் சாணி பாலுடன் புளித்த மோரைக் கலந்து தெளிக்கவும். இவ்வாறு குப்பை - சாணம் - சாணிப்பால் என எரு படுக்கையை குழி நிறை யும் அளவிற்கு தயார் செய்து கொள்ளவும்.இந்த எரு படுக்கையிணை கோணி சாக்கினால் மூடி 15 நாட்களுக்கு தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

அதன் பிறகு சுமார் கால் கிலோ வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து எரு படுக்கையின் மேல் தெளிக்கவும். பின் சுமார் 1000 புழுக்களை படுக்கை யின் மீது பரவலாக விட வேண்டும். குழியினை ஈர சாக்கு அல்லது வைக் கோல் கொண்டு மூடவேண்டும். பிறகு குழியைச் சுற்றிலும் எறும்புகள் போ காதவாறு லிண்டேன் தூள் மருந்தினை தூவவேண்டும். அவ்வப்போது தண் ணீர் தெளித்து அறுவடை வரை படுக்கையின் ஈரப்பதத்தினை 40 முதல் 50 சதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 30 லிருந்து 45 நாட்களுக்குள் மண்புழு எரு குருணைகளாக மாறிவிடும். இதுவே இதன் அறுவடை தயார் நிலையை குறிக்கும். கழிவுகள் முழுவதும் உரமாக உருவான பின்னர் மூன்று நாட்களுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் மேல் அடுக்குகளில் உள்ள மண் புழுக்கள் கீழே சென்று விடும் படுக்கையின் மேல் உள்ள எருவை சேகரித்து 3 மில்லிமீட்டர் அளவுள்ள சல்லடையில் சலிக்க வேண்டும்.
இவ்வாறு அறுவடை செய்த எருவினை தேவையான பைகளில் சேமித்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம் அல்லது விற்பனை செய்யலாம் . மண்புழு பொதுவாக ஆயிரம் டன் ஈர கழிவுகளை 300 டன் எருவாக மாற்றும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் தெரிவித்தார்.

Tags : Divakaran ,
× RELATED சசிகலா உயிருக்கு ஆபத்து