×

2021 ஜூனில் நாசாவிலிருந்து ராக்கெட்டில் ஏவப்படுகிறது கலை பண்பாட்டு துறை சார்பில் நடைபெறும்


தஞ்சை, டிச.28: கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஓவியக் கலைக் காட்சி தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓவிய படைப்புகளை பெற்று ஓவிய கலைக்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் ஓவியர்கள் தங்களது மரபு வழி மற்றும் நவீன பாணி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங் மற்றும் வாட்டர் கலர் பெயிண்டிங் படைப்புகள், சிற்பங்களை முறையாக தனி நபர் கண்காட்சி வைத்து தங்களது படைப்புகளை சந்தைப்படுத்தவும், ஓவியக் கலையை ஆர்வம் மிக்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட உள்ளது.

தங்களது கலைப் படைப்புகளை தேர்வு செய்வதற்கு மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனரால் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட உள்ளது. ஓவியக் கண்காட்சியில் முதல் பரிசு ரூ.3500 வீதம் 10 ஓவியக் கலைஞர்களுக்கும், 2ம் பரிசாக ரூ.2500 வீதம் 10 கலைஞர்களுக்கும், 3ம் பரிசாக ரூ.1500 வீதம் 10 ஓவியக் கலைஞர்களுக்கும் காசோலையாக வழங்கப்பட உள்ளது. எனவே தஞ்சை மாவட்டத்தில் ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக்கலைஞர்கள் தங்களது ஓவியப் படைப்புகளை தனி நபர் கண்காட்சியாக வைத்திட தன் விவரக் குறிப்பு மற்றும் படைப்புகள் எண்ணிக்கை விவரங்களுடன் உதவி இயக்குனர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், நீதிமன்றச் சாலை, தஞ்சை என்ற முகவரிக்கு வரும் ஜனவரி 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Tags : NASA ,Department of Arts and Culture ,
× RELATED கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள்: கலெக்டர் வழங்கினார்