தஞ்சை, டிச.28: தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் முடித்திருத்தகம், அழகு நிலையம், ஸ்பாமசாஜ் நிலையம் நடத்துவோர் உரிமம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சியால் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை மாநகராட்சி ஆணையாளரிடமிருந்து பெற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சட்டப்படி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் தொழில் உரிமம் இன்றி செயல்படுவதாக கருதி நிலையம் நடத்துவோரும், நிலைய உரிமையாளரும் பொறுப்பானவராக கருதி நிலையத்தை மூடி சீல் வைக்க அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தமிழ்நாடு சட்டம் 25/1981ன் கீழ் மேற்கொள்ளப்படும் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.