×

சீர்காழி அருகே பாகசாலையில் சாலை விரிவுபடுத்தும் பணி மும்முரம்

சீர்காழி, டிச.28: சீர்காழி அருகே பாக சாலையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்றது. சீர்காழி அருகே கதிராமங்கலத்திலிருந்து காத்திருப்புவரை இணைப்பு சாலையில் பாக சாலையிலிருந்து தேத்தாகுடி வரை சுமார் 1.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குறுகியதாக இருந்ததால் சாலையை அகலப்படுத்தி புதிய பாலங்கள் அமைக்க ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகையை கொண்டு சாலையை விரிவுபடுத்தி தார்சாலை அமைக்கும் பணி சீர்காழி எம்எல்ஏ பாரதி, நாகை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராசு ஆலோசனையின்பேரில் நடந்து வருகிறது. கதிராமங்கலத்தில் இருந்து மாநில நெடுஞ்சாலைத்துறையும், காத்திருப்புவரை தேசிய நெடுஞ்சாலை இரு சாலைகளையும் இணைப்பதால் பல்வேறு பகுதிகளுக்கு எளிதாக சென்று வர முடியும். இந்த சாலை அமைக்கும் பணியை சீர்காழி கோட்ட உதவி செயற்பொறியாளர் சூரியமூர்த்தி. உதவி பொறியாளர் செந்தில் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொது நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags : Road ,Sirkazhi ,school ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்