×

சுண்டக்காமுத்தூரில் சைக்கிள் போட்டி

கோவை,டிச.28: நல்லறம் அறக்கட்டளை மற்றும் வெஸ்டன் வேலி சைக்கிளிங் சார்பில் எம்.டி.பி சேலஞ்ச்  3-வது ஆண்டு சைக்கிள் போட்டி கோவை சுண்டாகாமுத்தூர் பகுதியில் நேற்று நடந்தது.  நிகழ்ச்சியை, அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி. அன்பசரன் வழிகாட்டுதல்படி, நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியானது 8 பிரிவுகளில் நடந்தது. 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3.5 கிலோமீட்டர் சைக்கிள் போட்டியும், 14 வயது முதல் பெரியவர்களுக்கான  7.5 கிலோ மீட்டர் சைக்கிள் போட்டியும் நடைபெற்றது.

இதில், வெற்றி பெற்றவர்களுக்கான நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், நல்லறம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் நல்லறம் முருகவேல், ரோட்டரி மணிகண்டன், சைக்கிளிங் தலைவர் ராபர்ட் ஆண்டனிராஜ், செயலாளர் சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cycling competition ,
× RELATED தேசிய ரோடு சைக்கிளிங் போட்டி: கண்டரமாணிக்கம் மாணவி சாதனை