×

மாவட்டத்தில் புதியதாக 94 பேருக்கு கொரோனா

கோவை, டிச. 28: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று மாவட்டத்தில் புதியதாக 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 980-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 109 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 478-ஆக உள்ளது. தற்போது, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 857 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். கொரோனா காரணமாக நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 645 என உள்ளது.

Tags : Corona ,newcomers ,district ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...