×

பெருந்துறையில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்

ஈரோடு, டிச. 28: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் மாரிமுத்து கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறையில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் புதியதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்துள்ள இடம் முக்கியமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும்.

அரசு பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக திறக்கப்பட்டுள்ள இந்த கடையினால் பொதுமக்கள் குறிப்பாக மாணவ, மாணவியர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே உடனடியாக கடையை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : closure ,Tasmac ,Perundurai ,store ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை