ஈரோடு, டிச. 28: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 13,541 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில், நேற்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து இதுவரை மொத்தம் 13,107 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பலி எண்ணிக்கை 143ஆக நீடித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.