ஈரோடு,டிச.28: பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை பேரூராட்சியில் எடப்பாடியார் நகரில் ரூ.8 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் தெருவிளக்குள் திறப்பு ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமாகிய தோப்பு வெங்கடாச்சலம் வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் திறப்பு விழா செய்து மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். விழாவில் சிஎம்எஸ் துணை தலைவர் ஜெகதீஸ், துணை சேர்மன் உமாமகேஸ்வரன், நகர செயலாளர் பழனிச்சாமி, கைலங்கிரி குப்புசாமி, துரைராஜ், நல்லசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.