×

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

திருவெண்ணெய்நல்லூர், டிச. 27: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் மகன் பரத்குமார் (16). அயன்வேலூர் கிராமத்தில் உள்ள மாதிரி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை ஒரு பைக்கில் பரத்குமார், அவரது நண்பர்களுடன் ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது பரத்குமார் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு மணல் எடுத்த பள்ளத்தில் சிக்கினார். அவரை மீட்ட நண்பர்கள் உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பரத்குமார் ஏற்கனவே இறந்து
விட்டதாக கூறினார். இதைக்கேட்ட அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.இதுகுறித்து குமரவேல் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில வருடத்துக்கு முன்பு ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் தென்பெண்ணையாற்றில் மணல் எடுத்த பள்ளத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Schoolboy ,river ,Thiruvennallur ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...