×

திருவெண்ணெய்நல்லூர் அருகே தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து நாசம் ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருவெண்ணெய்நல்லூர், டிச. 27: திருவெண்ெணய்நல்லூர் அருகே தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தி.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன்(53). நேற்று இவரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மேற்கூரையில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியுள்ளது காற்றின் வேகத்தால் அருகில் உள்ள அவரின் சகோதரன் எட்டியான்(50), மற்றும் அர்ஜூனன்(62), ஏழுமலை(55), காளி(51) ஆகியோரின் வீடுகளும் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர், திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 10 பேர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். ஒரே நேரத்தில் 5 வீடுகள் தீப்பற்றியதால் விரைந்து தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறினர். இந்த தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் என ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்பித்துள்ளனர். திருக்கோவிலூர் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிபத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களை தற்காலிகமாக அரசு கட்டிடத்தில் தங்க வைக்க உத்தரவிட்டார். மேலும் 5 குடும்பங்களுக்கும் வேட்டி, சேலை, அரசி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த சம்பவத்தால் தி.குன்னத்தூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தி.எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த காதர் உசேன் மகன் அப்துல்ரஹ்மான் வீடு திடீரென மின்
கசிவு ஏற்பட்டுஎரிந்துள்ளது. திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருந்தும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

Tags : houses ,Thiruvennallur ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்