×

திருப்பூரில் இருந்து பா.ஜ.வினர் சட்டப்பேரவை செல்ல வேண்டும்

திருப்பூர், டிச.27: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் இல்ல பெயர் பலகையை நேற்று பா.ஜ. மாநில தலைவர் எல்.முருகன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,`திருப்பூரில் பிரமாண்டமாக வேல் யாத்திரையை நடத்தி இருந்தீர்கள். முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நடிகை குஷ்பூ ஆகியோர் பங்கேற்று யாத்திரையை சிறப்பித்தனர்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு சிறிது காலமே உள்ளது. ஆகையால், இருக்கும் நாட்களில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. ஆகவே, நாம் அனைவரும் இணைந்து, சட்டப்பேரவையில் அதிக பா.ஜ. உறுப்பினர்களை அமர வைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் பா.ஜ. உறுப்பினர்கள் சட்டப்பேரவை செல்ல வேண்டும். ஆகவே, அதற்கான பணிகளை தொடர்ந்து செய்வோம்’ என்றார்.

Tags : BJP ,Tirupur ,legislature ,
× RELATED திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து...