×

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச.27: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. டெல்லி போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், அகில இந்திய பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கக்கிளை ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பல்வேறு  சங்கங்களைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன், விஸ்வநாதன், கல்யாணராமன், குமாரவேல், முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர். மேலும், தமுஎகச துணை பொதுச்செயலாளர் கருப்பு கருணா மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags : protest ,BSNL Employees ,
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...