×

காஸ் அடுப்பில் தீப்பற்றி மூதாட்டி உடல் கருகி பரிதாப பலி

ஆவடி: ஆவடி காமராஜர் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி அம்சவேணி(80). நேற்று காலை அம்சவேணி வீட்டில் காஸ் அடுப்பில் டீ போட்டு உள்ளார். அப்போது,  எதிர்பாராத விதமாக அடுப்பிலிருந்து தீ அவரது புடவையில் பற்றி எரிந்துள்ளது. இதில், அவர் உடல் முழுவதும் தீப்பிடித்து படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவர் சத்தம் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். பின்னர், பொதுமக்கள் தீயை அணைத்து அவரை மீட்டு ஆவடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அம்சவேணி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில், ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : death ,
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை