பந்தலூர், டிச.27: நீலகிரி ஆதிவாசி கூட்டமைப்பு சார்பில் தலைவர் கண்ணன், செயலாளர் நீலகண்டன் ஆகியோர் தமிழக முதல்வர் மற்றும் நீலகிரி கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது ‘‘கூடலூர், பந்தலூரில் நான்கு வகையான ஆதிவாசி இனமக்கள் என சுமார் 25,000 ஆயிரம் மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் ஆதிவாசி மக்களுக்குகென அனைத்து வசதிகளுடன் மருத்துவமனை ஒன்று அரசு அமைத்துதரவேண்டும்.
நோய் வாய்ப்பட்ட ஆதிவாசி மக்கள் சிகிச்சை பெறுவதற்கு கேரளா மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தொலைதூரத்தில் உள்ள கோவை போன்ற இடங்களுக்கு சென்று மருத்துவம் பெறுவதால் பொருளாதார பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே அரசு சார்பில் பந்தலூரில் அனைத்து வசதிகளுடன் ஆதிவாசி மக்களுக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.