×

பாக்கு தோப்பில் சூதாடிய 10 பேர் கும்பல் கைது

பாலக்காடு,டிச.27:  கிறிஸ்துமஸ், புத்தாண்டு முன்னிட்டு செருப்புழச்சேரி பகுதியில் கடந்த சில நாட்களாக சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது. இந்நிலையில் பாலக்காடு டவுண் வடக்கு எஸ்.ஐ., சுதீஷ்குமார் தலைமையில் போலீசார் பாக்கு தோப்பில் அதிரடியாக நேற்று சோதனை நடத்தினர். அப்போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த 10 பேர் கும்பல் சிக்கியது. இவர்களை கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக போலீசார் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.1.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Gang ,Baghdad ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை