×

குன்னூர், பந்தலூரில் கடும் பனி மூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குன்னூர்,டிச.27: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. அதிகாலையில் கடும் குளிர் நிலவுவதால் கேரட் அறுவடை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடும் பனி மூட்டம் நிலவுவதால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி ஊர்ந்து செல்கின்றன. குளிர் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

பந்தலூர்: பந்தலூர்,  கூடலூர் பகுதிகளில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொலிவு  மாதங்களாகும் கடந்த காலங்களில் நீர்பனி அதிகமாக இருந்ததில்லை தற்போது  அதிகரித்து காணப்படுகிறது. காலை 9 மணி வரை  பனிப்பொலிவு நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை நேரத்தில் பசுந்தேயிலை பறிக்கச்செல்லும்  தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நடைபயிற்சி செல்பவர்கள் உள்ளிட்ட பலரும்  சிரமப்படுகின்றனர் அதிகாலை நேரங்களில் நீர் பனிப்பொலிவு காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எறிய விட்டவாறு வாகனங்களை இயக்குகி செல்கின்றனர்.

Tags : Coonoor ,Pandharpur ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...