×

வேளாண் சட்டம் வாபஸ் கோரி டோல்கேட் முற்றுகை போராட்டம்

நெல்லை, டிச. 27: மத்திய வேளாண் சட்டத்தை வாபஸ்பெறக்கோரியும், இதற்காக டெல்லியில் தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாங்குநேரி டோல்கோட்டில் முற்றுகை போராட்டம் நடந்தது.  விசிக, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, ஆதித்தமிழர் பேரவை, புரட்சி பாரதம், தமிழ்ப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நாங்குநேரி  டோல்கேட்டை முற்றுகையிட்டு நடந்த இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் அப்துல் ஜப்பார், விசிக தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் தலைமை வகித்தனர்.  இதில் திரளாகப் பங்கேற்றோர், மத்திய, மாநில  அரசுகளை கண்டித்தும்  தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கோஷமிட்டனர். இத்தில் விசிக நிர்வாகிகள் இசக்கிவேல், பாபு, ஹரிமுருகன் சுபாஷ், தமிழ்ப்புலிகள் மாவட்டச் செயலாளர் நெல்லை தமிழரசு, நாங்குநேரி தொகுதி செயலாளர் காளிதாஸ், ஜமால், ரபீக், நயினார், அஜித், சாந்தி, ஜாபர், இஸ்மாயில், ரியாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதை முன்னிட்டு டோல்கேட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : siege protest ,withdrawal ,
× RELATED பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா,...