நெல்லை, டிச.27: பாளை தியாகராஜநகரில் சைவ வேளாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார். செயலாளர் கதிரேசன், செயல் தலைவர் வாகை கணேசன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முத்துசாமி வரவேற்றார். துணைத்தலைவர் செந்தூர்நாதன், முன்னாள் தாசில்தார் பழனியப்பன், பழனிவேல், சுப்பிரமணியன், செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் மாணவர்களுக்கு ரூ3 லட்சத்து 36 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது அதன் மூலம் பலனடைந்த 55 பேர் குறித்து தீர்மானம் வைத்து விவாதிக்கப்பட்டது. மேலும் கல்வி அறக்கட்டளை மூலம் தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூக மாணவர்களுக்கு உதவ தீர்மானிக்கப்பட்டது. இதற்கு பொருளதவி ெசய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.