×

ஈரோடு பகுதியில் நாளை மின் தடை

ஈரோடு, டிச. 27: ஈரோடு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் சத்தி ரோடு மின்பாதையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய்கள் பதிக்கும் பணி நாளை (28ம் தேதி) நடக்க உள்ளது. இதனால், நேரு வீதி, சத்தி ரோடு, மஜித் வீதி, பிருந்தா வீதி, பழனிமலை வீதி, ஓட்டுக்கார சின்னையா வீதி, கிருஷ்ணன் வீதி, ஏ.பி.டி ரோடு, கே.ஏ.எஸ் நகர், மீராமொய்தீன் வீதி, மோசிக்கீரனார் வீதி, இந்திரா நகர், ரங்கநாதன் வீதி, வெங்கடபெருமாள் வீதி, மரப்பாலம் ரோடு, எஸ்.சி.எம். மில் ரோடு, செந்தில் கார்டன் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பவானி பூனாச்சியில் 30ல் மின்தடை:  பவானியை அடுத்த பூனாச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் வரும் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அதன்படி, பட்லூர், நால்ரோடு,  ஒலகடம், ஒட்டபாளையம், தாளபாளையம், பூனாட்சி, முளியனூர், ஊஞ்சப்பாளையம், மூனாஞ்சாவடி, பூதப்பாடி, கெம்மியம்பட்டி, சமயதாரனூர், பூசாரியூர், கோணமூப்பனூர், குறிச்சி, செம்படாபாளையம், மாணிக்கம்பாளையம் மற்றும் கூச்சிக்கல்லூர் ஆகிய பகுதிகளில் மின்தடைபடும்.

Tags : Erode ,
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...