×

காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி

வாழப்பாடி, டிச.27: கருமந்துறையில் காஸ் விலை உயர்வு, வேளாண் மசோதவை எதிர்த்து காங்கிரசார் ஏர்கலப்பை பேரணி நடத்தினர். அதனை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கருமந்துறையில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும், காஸ் விலை உயர்வை கண்டித்து பஸ் ஸ்டாண்டில் ஏர் கலப்பையுடன் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாக செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரப்பரப்பு நிலவியது. ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கம் குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், சேலம் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமுருகன், முன்னாள் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிமாறன், சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் தும்பல் செல்வராஜ், வழக்கறிஞர் அணி தலைவர் தேவேந்திரன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Air plow rally ,Congress ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...