×

தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும்

நாகர்கோவில், டிச.27: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் ஆட்சிமொழி சட்ட வார விழா நிகழ்வில் ஒரு பகுதியாக குமரி மாவட்ட வணிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் உதவி இயக்குநர் ரெசினாள் மேரி தலைமை வகித்தார். இந்து கல்லூரி இணைப்பேராசிரியர் வேணுகுமார் தமிழின் சிறப்பு மற்றும் தமிழ் ஆட்சி மொழி ஆக்குவதற்கு பல்வேறு ஆளுமைகள் நிகழ்த்திய போராட்டங்கள் பற்றியும் எடுத்து கூறினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், ‘தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட    தலைவர் நாகராஜன், செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது