×

விண்ணப்பிக்க அழைப்பு வேளாண் சட்டங்களை திரும்பபெற கோரி ஆடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் ஏர்கலப்பையுடன் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச.27: கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் ஆடுதுறையில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்த ஆடுதுறை பேருந்து நிலையத்திற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வந்தனர;. அப்பொழுது அங்கு முன்கூட்டியே இருந்த திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகன் தலைமையில் போலீசார் கயிறு கட்டி தடுத்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் ஆத்திரம் அடைந்த காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்வதற்குள்ளேயே கைது செய்வதா? என கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்தனர். பின்னர் ஏர் கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சிறிது நேரத்தில் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் லோகநாதன் உட்பட சுமார் 100பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags : parties ,arena ,Congress ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...