தஞ்சை,டிச.27: திருவிசநல்லூர் சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வர சுவாமி, பஞ்சமுக மஹாமங்கல ப்ரத்தியங்கிராதேவி கோயிலில் இன்று (27ம் தேதி) ஞாயிறு அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை மங்கல வாத்தியம், மகரகணபதி வழிபாடு, சனிப்பெயர்ச்சி பரிகார ஹோம சங்கல்பம், சனிபகவான் திலஹோமம், அபிஷேகம், அலங்காரம், அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெறுவதால் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சனிபகவான் அருள் பெற வேணுமாய் கோயில் அர்ச்சகர் கணேஷ்குமார் குருக்கள் தெரிவித்துள்ளார்.