×

கிசான் நிதி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

திருமயம், டிச.27: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்தில் பிஎம்கிசான் நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கும் நிகழ்ச்சி திருமயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை வேளாண்மை அலுவலர் முருகன், கூட்டுறவு வங்கி செயலாளர் சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பாரத பிரதமர் அவர்களால் காணொளி நிகழ்ச்சி மூலம் மாநில விரிவாக்க திட்டங்களின் அட்மா கீழ் விவசாயிகளுக்கு பயிற்சியுடன் கூடிய காணொளி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் பிரதமர் கவுரவ திட்டத்தில் பங்கு பெற நேரடி பட்டா, நிலம் உள்ள விவசாயிகள் தங்களின் பட்டா நகல், ஆதார்அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் உடன் பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பதிவு செய்து பயனடையலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் அருள் பிரபு ராஜா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ரங்கராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Kisan ,
× RELATED தவணைத்தொகை கிடைக்காத விவசாயிகள்...