×

வேதாரண்யம் பகுதியில் 675 குடும்பத்தினருக்கு இலவச ஆடுகள் வழங்கல்

வேதாரண்யம், டிச.27: நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா குரவப்புலம் கிராம பகுதியைச் சேர்ந்த 275 குடும்பங்கள், மருதூர் வடக்கு கிராம பகுதியைச் சேர்ந்த 400 குடும்பங்கள் என மொத்தம் 675 குடும்பங்களுக்கு, மொத்தம் ரூபாய் 85 லட்சம் மதிப்புடைய விலையில்லா வெள்ளாடுகளை அமைச்சர் ஓ எஸ் மணியன் குரவபுலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். நிகழ்ச்சியில் குரவப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பாளர் சுமதி, நாகை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், ஒன்றியகுழு தலைவர் கமலாஅன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் திலீபன், சுப்பையன் மற்றும் ஆயக்காரன்புலம் ஊராட்சி மன்றத்தலைவர் ராமையன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் சொக்கலிங்கம் நன்றி கூறினார்.

Tags : families ,area ,Vedaranyam ,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...