×

ஈஸ்வரன் பேட்டி கரூரில் பனிப்பொழிவு அதிகரிப்பு

கரூர், டிச. 27: கரூர் நகரில் அதிகாலை நேரத்தில் தொடரும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் சாலையை எளிதில் கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக கரூர் நகரம் மற்றும் மாவட்டம் முழுதும் அதிகாலை நேரத்தில் அதிகளவு பனியின் தாக்கம் அதிகளவு இருந்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு தரப்பினர்களும் இதன் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கரூர் நகரைச் சுற்றிலும் திருச்சி, மதுரை, சேலம், கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கான பைபாஸ் சாலைகள் உள்ளன. இந்த சாலைகளிலும் அதிக பனிப்பொழிவின் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.பொங்கல் பண்டிகைக்கு பிறகு பனிப்பொழிவு மெல்ல மெல்ல குறையும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே மழை பெய்தால் பனியின் தாக்கம் குறையும் என்பதால் மக்கள் மழையினை எதிர்நோக்கியுள்ளனர்.

Tags : Eeswaran ,Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...