×

வைரகிரீடம் தரித்து பெருமாள் எழுந்தருளினார் பைக்குகள் மோதலில் போட்டோகிராபர் பலி

மன்னார்குடி, டிச. 26:திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் கலியன் (எ ) கலைச்செல்வன் (58). போட்டோகிராபர். இவரின் மனைவி கடந்த 4 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டதால் தனது மகள் ராதிகா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை பால் வாங்குவதற்காக கலைச்செல்வன் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே பைக்கில் வந்த போது எதிர் திசையில் இருந்து ருக்குமணிகுளம் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த ரவி என்பவர் ஒட்டி வந்த பைக் கலைச்செல்வன் பைக் மீது மோதியது. இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கலைச்செல்வன் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Perumal ,bike collision ,photographer ,
× RELATED திருவாரூர் அருகே பக்தவத்சல பெருமாள்...