பாபநாசம், டிச. 26: பாபநாசம் காவல் சரக உட்கோட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் முகாம், அய்யம்பேட்டையில் நடந்தது. பாபநாசம் டிஎஸ்பி ஆனந்த் தலைமை வகித்தார். இதில் பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, மெலட்டூர் காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு 30 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் கரிகால்சோழன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.