×

பொங்கல் பரிசுதொகுப்பு, ரொக்கத்தொகை வழங்க குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன்

புதுக்கோட்டை, டிச.26: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:2021-ம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்ட அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.2 ஆயிரத்து 500 வழங்க அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.2 ஆயிரத்து 500 தொடர்புடைய நியாய விலைக் கடைகள் மூலமாக 4.1.2021 முதல் தொடங்கி 12.01.2021-க்குள் வழங்கி முடிக்கவும், விடுபட்ட அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு 13.1.2021 பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை புதுக்கோட்டை மாவட்டத்தில், புழக்கத்தில் உள்ள 4 லட்சத்து 63 ஆயிரத்து 988 அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு (இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உட்பட) தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.பொங்கல் பரிசுத் தொகுப்பு: தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.2 ஆயிரம் 500 பெறுவதற்கும், நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையிலும் தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு ஏதுவாக முற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் வழங்கும் நாள் நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 26.12.2020 முதல் 30.12.2020 முடிய வீடுதோறும் சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் வழங்கவும் முற்பகலில் பொருட்கள் பொறாத குடும்ப அட்டைதாரர்கள் பிற்பகலில் வரும் பட்சத்தில் அவர்களுக்கும் பொருட்கள் வழங்கவும், குறிப்பிட்ட நாளில் பொறாத குடும்ப அட்டைதார்களுக்கு 13.01.2021 வழங்கவும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், மின்னணு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் யார் சென்றாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடையில் வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் பெற்றுச் செல்ல வர வேண்டும்.மின்னணு குடும்ப அட்டைகள் தொலைந்து போன இனங்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர் எவரேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை வைத்தோ, அல்லது பதிவு செய்யப்பட்ட அலைப்பேசியில் பெறப்படும் கடவுச் சொல்லைக் கொண்டோ பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.2 ஆயிரத்து 500னை பெற்றுக் கொள்ளலாம்.என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : homes ,family cardholders ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை