×

3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு

நாகை, டிச.26: நாகையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை கலெக்டர் பிரவீன்பிநாயர் ஆய்வு செய்தார்.
வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாகையில் இஜிஎஸ்பிள்ளை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த இடத்தை கலெக்டர் பிரவீன்பிநாயர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் இஜிஎஸ்பிள்ளை பொறியியல் கல்லூரியில் அமையவுள்ளது. இந்த இடத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணுவதற்கான இடம் மற்றும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது என்றார்.நாகை எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா, கூடுதல் கலெக்டர் பிரசாந்த், டிஆர்ஓ இந்துமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், பயிற்சி கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, ஆர்டிஓ பழனிகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : Collector ,vote counting center ,Assembly constituencies ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...