×

கொரோனா தடுப்பு விதி பின்பற்றி திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா நடத்த அனுமதி

காரைக்கால், டிச 26: திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 48 நாட்கள் நடைபெறும் விழாவை கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.டிசம்பர் 27ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி திருவிழாவின்போது பக்தர்களை அனுமதிக்கும் அரசின் முடிவிற்கு தடை விதிக்கக்கோரி நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், சனீஸ்வர பகவான் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா தாக்கல் செய்த பதில் மனுவில், சனிப்பெயர்ச்சி தினமான 27ம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாகவும், நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம் போன்ற தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சனிப்பெயர்ச்சி தினத்தை தவிர்த்து மீதமுள்ள 48 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,
இந்த 48 நாட்களில் தரிசனத்துக்காக 60,000 மின்னணு அனுமதி சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப் பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள போதிலும் தரிசனத்திற்கு ஒரு நாள் எத்தனை பேரை அனுமதிப்பார்கள் இந்த விவரங்கள் தெரிவிக்கப் படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி அனிதா சுமந்து, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்துவது தொடர்பாக புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் மற்றும் புதுச்சேரி, துணைநிலை ஆளுநர், மனுதார் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். கொரோனா தடுப்பு நடைமுறைகளை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என அனுமதித்து வழக்கை முடித்து வைத்தார்.

இதன் அடிப்படையில் சனிப்பெயர்ச்சியை நடத்த தேவஸ்தான நிர்வாகம் தயாரான நிலையில் நேற்று திருநள்ளாறு தேவஸ்தானத்திற்கு வந்திருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தரங்கம்பாடியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி மனுதாரர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் .அதன்பிறகு திருநள்ளாறு வந்து தேவஸ்தானத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார் . அதன் பின்னர் கோயிலில் சனிப்பெயர்ச்சிக்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச விதிமுறைகளை முன்னிறுத்தி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கையெழுத்திட்டனர் .

Tags : pacification ceremony ,Thirunallar ,
× RELATED பிரமோற்சவ விழாவின்போது திருநள்ளாறு...