×

டிரைவருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளிக்கு வலை

கரூர், டிச. 26: கரூர் சின்னாண்டாங்கோயில் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு அரிவாளால் வெட்டிவிழுந்தது. இதையொட்டி வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (24). டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தனுஷ்(20). கூலித்தொழிலாளி. இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த போது, தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தனுஷ், அரிவாளால் கார்த்தியின் கை மற்றும் தலையில் வெட்டி விட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த கார்த்தி, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இது குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு தனுஷை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...