×

கரூர் பண்டரிநாதன் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

கரூர், டிச. 26: சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வினை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் சொர்க்கவாசல் நிகழ்வு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் ஊரடங்கினை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.கரூர் நகரப்பகுதியில் உள்ள பண்டரிநாதன் கோயிலில் நேற்று காலை 4.45 மணியளவில் சொர்க்க வாசல் நிகழ்வு நடைபெற்றது. கரூர் நகரப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், கரூர் மாவட்டத்தில் கரூர், பசுபதிபாளையம், குளித்தலை, மாயனூர் போன்ற பகுதிகளில் 7க்கும் மேற்பட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை முதல் மாலை வரை கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Heaven's Gate ,Karur Bandarinathan Temple ,
× RELATED திருப்பதியில் நாளை முதல் இலவச சர்வ...