×

மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

ஆரணி, டிச.26: ஆரணி டவுன் மார்க்கெட் ரோட்டு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி மகன் பிரகாஷ்(24). செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று, பிரகாஷ் மற்றும் உடன் வேலை செய்யும் நண்பர்கள் கடையின் மேல் மாடியில் இருந்த விளம்பர பேனரை அகற்றிவிட்டு, புதிய பேனரை வைத்தனர். அப்போது, கடையின் அருகே செல்லும் உயரழுத்த மின் கம்பியின் மீது திடீரென பேனர் விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து பிரகாஷ் தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இறந்த பிரகாஷின் தந்தை பாலசுப்பிரமணி ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  செய்யாறு அடுத்த தளரப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(49). இவர் கடந்த 8 ஆண்டுகளாக அதே கிராமத்தில் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் அதே கிராமத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ப்யூஸ் போடுவதற்காக சென்றார். அப்போது, திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதில் முனுசாமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சுகுணா, மோரணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Electricity strike ,
× RELATED நாடு முழுவதும் மின்ஊழியர்கள் போராட்டம்