×

கே.வி.குப்பம் அருகே எம்பி முன்னிலையில் அதிமுகவில் விலகி 30 பெண்கள் திமுகவில் இணைந்தனர்

கே.வி.குப்பம், டிச.26: கே.வி.குப்பம் சேத்துவண்டை ஊராட்சியில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொறுப்பாளர் சீதாராமன் தலைமையில் நேற்று முன்தினம் கிராம சபா கூட்டம் நடந்தது. இதில் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் முன்னிலையில் அதிமுகவை சேர்ந்த சுமார் 30 பெண்கள் திமுகவில் இணைந்தனர். மேலும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற வாசகத்துடன் 100ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெயர் பலகையில் கையெழுத்து இட்டு தீர்மானமாக நிறைவேற்றினர். தொடர்ந்து சேத்துவண்டை பகுதியில் உள்ள நியாய விலை கடையை ஆய்வு செய்தார். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் தயாள மூர்த்தி, ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிகழ்ச்சியை கோபி, மனோஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா நன்றி கூறினார்.

Tags : women ,KV Kuppam ,DMK ,AIADMK ,
× RELATED ரம்ஜான் நெருங்கும் நிலையில்...