×

பெரியார் நினைவுதினம் சிலைக்கு திமுக, மதிமுகவினர் மரியாதை

தூத்துக்குடி, டிச.26: பெரியார் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு  திமுக, மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியார் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தென்பாகம் காவல்நிலையம் முன்புள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், கஸ்தூரிதங்கம், சரத்பாலா, ரமேஷ், அருண்குமார், பரமசிவம், மீனவரணி துணைச்செயலாளர் சேசையா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், மேகநாதன், மாநகர மகளிரணி ஜெயக்கனி, மாவட்ட பிரதிநிதி கதிரேசன், அண்ணாநகர் பகுதி துணை செயலாளர் பாலு, வட்டச்செயலாளர் சிங்கராஜ், வக்கீல் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மதிமுகவினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மீனவரணி நக்கீரன், ஒன்றிய செயலாளர் சரவணன், அனல் செல்வராஜ், பேச்சிராஜா, மகாராஜன், செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,Periyar Memorial ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...