×

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏழைகளுக்கு ₹6 லட்சம் மதிப்பிலான பரிசு ஐவிடிபி நிறுவனர் வழங்கினார்

கிருஷ்ணகிரி, டிச.26: கிருஷ்ணகிரி ஐவிடிபி நிறுவனம், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஏழை, எளியோர் மற்றும் நோயுற்றோருக்கு பரிசு வழங்கி வருகிறது. அதன்படி, கொரோனா தொற்று காலத்தில் படுத்த படுக்கையாக துன்புறும் 50 நோயாளிகளுக்கு ₹1 லட்சம் மதிப்பிலான தண்ணீர் படுக்கைகள் வழங்கியும், கிருஷ்ணகிரி நகரில் சாலையோரங்களில் கடும் குளிரால் அவதியுற்ற 50 பேருக்கு ₹10 ஆயிரம் மதிப்பிலான போர்வைகள், மெட்டாலா லயோலா கல்லூரி பணியாளர்கள் 90 பேருக்கு ₹2.20 லட்சம் மதிப்பிலான டின்னர் செட் மற்றும் போர்வைகள், மதகொண்டப்பள்ளி நமது மாதா பள்ளி ஆசிரியர்கள் 18 பேருக்கு ₹72 ஆயிரம் மதிப்பிலான டின்னர் செட், 200 ஏழை, எளிய மக்களுக்கு ₹2 லட்சம் மதிப்பிலான சத்துணவு தொகுப்புகள் வழங்கப்பட்டது. அனைத்து தரப்பினருக்கும் பரிசுகளை வழங்கிய ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுவரை இவ்வாண்டு ஐவிடிபி நிறுவனம் மூலம் ₹6 லட்சம் மதிப்பில் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கியுள்ளது.

Tags : founder ,IVDP ,occasion ,poor ,Christmas ,
× RELATED ரமலான் பண்டிகை கோலாகலம் ; இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை