×

தூக்கில் தொங்கிய நிலையில் கீரிப்பாறை மலையில் ஆண் சடலம்

பூதப்பாண்டி, டிச.26: கீரிப்பாறை  அருகே மலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இது கொலையா? அல்லது தற்கொலையா? என ேபாலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.  கீரிப்பாறை அடுத்த தடிக்காரன்கோணம் அருகே  குட்டிபொத்தை மலை உள்ளது. இது அழகியபாண்டியபரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட  பகுதியாகும். இந்நிலையில்  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களில் சிலர் நேற்று குட்டிபொத்தை மலைக்கு சென்றுள்ளார். அப்போது மலையில் துர்நாற்றம்  வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்து மலையில் சுற்றி பார்த்தனர். அப்போது  பூவரசம் மரம் ஒன்றில் சுமார் 50 வயது மதிக்கப்பட்ட ஒரு ஆண் தூக்குப்போட்டு  இறந்த நிலையில் காணப்பட்டார்.  உடல் அழுகிய நிலையில் இருந்ததால், இறந்து 4  நாட்கள் ஆகி இருக்கலாம் என கருதப்படுகிறது. கைலி மூலம் தூக்குப்போட்ட  நிலையில் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார்.  இதுபற்றி தகவல்  அறிந்ததும் கீரிப்பாறை போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.  இருப்பினும் இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம்  உடனடியாக தெரியவில்லை. அவரை அடித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விட்டு  தப்பி சென்றனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை முடுக்கி விட்டுள்ளனர்.  தொடர்ந்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags : hill ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!