×

மத்திய, மாநில அரசுகள் தேர்தலுக்காக மக்களின் காவலர் வேஷம் போடுகின்றனர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ குற்றச்சாட்டு

சின்னாளபட்டி, டிச. 26: ஆத்தூர் ஒன்றியம், கலிக்கம்பட்டியில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகிக்க, மாவட்ட துணை செயலாளர் மார்க்கிரேட்மேரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, துணை தலைவர் ஹேமலதா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காணிக்கைராஜ், நாகவள்ளி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளரும், எம்எல்ஏ ஐ.பெரியசாமி பேசுகையில், ‘10 ஆண்டுகளாக தமிழக மக்களை பற்றி கவலைப்படாத மத்திய, மாநில அரசுகள் தற்போது தேர்தலுக்காக மக்களின் காவலர் என வேஷமிடுகிறார்கள். திமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை, விவசாய கடன் தள்ளுபடி என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நான் அமைச்சராக இருந்த காலத்தில் தொகுதிக்குள் வலம் வந்து மக்களின் குறைகளை கேட்டு அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்த என்னை பற்றி பேச இங்குள்ள அதிமுகவினர், பாஜகவினருக்கு யோக்கியதை கிடையாது. டெல்லியில் 28 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளை சந்திக்க கூட பிரதமர் மோடி நேரம் ஒதுக்காமல் உள்ளார்.

இவ்வளவு கேவலமான ஆட்சி இந்தியாவில்தான் நடக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினரையும், பாஜகவினரையும் மக்கள் ஓட, ஓட விரட்டியடிப்பார்கள். 120 நாட்களுக்கு பின்பு தமிழக மக்களுக்கு விடிவுகாலம் ஏற்படும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலரும். இது உறுதி’ என்றார். இதில் ஒன்றிய துணை செயலாளர் பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உலகநாதன், ராஜா, கருப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருளரசன், பேரூர் முன்னாள் செயலாளர் அறிவழகன், மாவட்ட பிரதிநிதி தங்கவேல், ஒன்றிய அவை தலைவர் வீரையா, ஒன்றிய துணை செயலாளர் அமிர்தமேரி வசந்தா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : governments ,I. Periyasamy MLA ,state ,guards ,elections ,
× RELATED தமிழக மீனவர்களின் சிக்கலுக்கு...