சாயல்குடி, டிச.26: எம்ஜிஆர் நினைவுதினத்தை முன்னிட்டு கடலாடி பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் முனியசாமிபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், ஜெ. பேரவை செயலாளர் நீதிதேவன், துணை செயலாளர் முத்துமுருகன் கலந்து கொண்டனர். அமமுக சார்பில் ஒன்றிய அவைத்தலைவர் மகேந்திரபாண்டியன் முன்னிலையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர்.
முதுகுளத்தூரில் எம்ஜிஆர் படத்திற்கு யூனியன் சேர்மன் தர்மர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கி தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.