பரமக்குடி, டிச.26: பரமக்குடி தரைப்பாலம் தர்ம சாஸ்தா கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான ஆரியங்காவில் தர்மசாஸ்தா, புஷ்பகலா தேவி திருக்கல்யாணம் நடைபெறும். அதேபோல் பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மேளதாளங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு விமர்சையாக நடந்தது. பின்பு நேற்று காலை 9.45 மணி முதல் 10.30 மணிக்கு புஷ்பகலா தேவிக்கு தர்மசாஸ்தா மங்கலநாண் கட்டினார். இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.