×

பல ஆண்டுக்கு பின் தும்மக்குண்டுவில் சாலை புதுப்பிப்பு

வருசநாடு, டிச. 26: வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் சீலமுத்தையாபுரம் முதல் காந்திகிராமம் வரை சுமார் 5 கிமீ தூரம் சாலை செல்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இச்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக கிடந்தது. இதனால் வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளகுவதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இச்சாலையை புதுப்பிக்க டிஎன்ஆர்ஆர்ஐஎஸ் திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தனர். இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தர்மராஜ் தலைமை வகிக்க, மாவட்ட கவுன்சிலர் இளம்வழுதி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கிராமவாசி ஆண்டி கூறுகையில், ‘‘பல ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தான் இந்த மலைக்கிராம சாலை பணி. மேலும் இவ்வெற்றிக்காக சாலையின் அவலநிலை செய்தியை பிரசுரித்த தினகரன் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’ என்றார்.

Tags : Tummakundu ,
× RELATED கடமலை – மயிலை ஒன்றியத்தில் விரைவில் அவரைக்காய் விலை உயரும்