×

வெண்மணி தியாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சி

திருப்பூர், டிச. 26:  திருப்பூர் காட்டுவளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வெண்மணி தியாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சம்பத் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன், தெற்கு நகர செயலாளர் ஜெயபால், ஆகியோர் வெண்மணி தியாகிகள் குறித்து பேசினர். இதில்  மதிமுக வழக்கறிஞர் அணி கந்தசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தெற்கு மாநகரத் தலைவர் பாலு, தெற்கு மாநகரச் செயலாளர் சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  ஒன்றிய செயலாளர் மூர்த்தி, காட்டுவளவு கிளைச் செயலாளர் இளங்கோ, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் இறுதியில் வெண்மணி தியாகிகள் ஸ்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக கட்சி கொடியை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் நந்தகோபால் ஏற்றி வைத்தார்

Tags : Venmani Martyrs Memorial Program ,
× RELATED திருப்பூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு; பூக்கள் விலை குறைவு