×

பெரியார் நினைவுநாள் பல்வேறு கட்சியினர் அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம்: பெரியாரின் நினைவு நாளான நேற்று, காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரம் நகர திமுக சார்பில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் சேகரன், காஞ்சி நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அசோகன், வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம், தேமுதிக சார்பில் நகர செயலாளர் சாட்சி சண்முக சுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் குமார், வனஜா உள்பட ஏராளமானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Periyar Memorial Day ,parties ,
× RELATED அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு