×

47 வது நினைவு தினத்தையொட்டி

மன்னார்குடி, டிச.25: தந்தை பெரியாரின் 47 வது நினைவு தினத்தையொட்டி மன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட திக தலைவர் சித்தார்த்தன் தலைமையில் நகர தலைவர் உத்திராபதி, நகர செயலாளர் ராமதாஸ், ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட ஏராளமான திகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதிமுக சார்பில் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்ஜி குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவா ராஜமாணிக்கம், மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்தனர்.

திருவாரூர்: தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினத்தையொட்டி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது உருவச்சிலைக்கு தி.க சார்பில் மாவட்ட தலைவர் மோகன், துணைத்தலைவர் அருண் காந்தி மற்றும் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் தேவா, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினி சின்னா மற்றும் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் மதிமுக சார்பில் மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.  திருவாரூர் நகர திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு நகர செயலாளர் பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்எல்ஏ அசோகன் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் செந்தில், மாவட்ட பிரதிநிதி அசோகன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் முழு உருவ வெங்கலசிலைக்கு திக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்ட அமைப்பாளர் செல்வம், நகர தலைவர் குணசேகரன், ஒன்றிய தலைவர் சித்தார்த்தன், நகரச் செயலாளர்நாகராஜன், திருவாரூர் மண்டல மாணவரணி செயலாளர் உமாநாத் ஆகியோர் முன்னிலையில் திமுக நகர செயலாளர் பாண்டியன் தலைமையில் எம்எல்ஏ ஆடலரசன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்தனர்.

Tags : occasion ,Memorial Day ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...