×

நாகுடி அருணாசலபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு, ஆதரவு

அறந்தாங்கி, டிச.25: அறந்தாங்கி அருகே நாகுடி அருணாச்சலபுரத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அறந்தாங்கியை அடுத்த நாகுடி அருகே உள்ள அருணாச்சலபுரம் குடியிருப்பு அருகே டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க கடந்த சில மாதங்களாக சிலர் முயற்சி மேற்கொண்டு வந்தனர். குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டால் பொது அமைதி கெடும் என்பதால் அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இன்று (வெள்ளிக்கிழமை) மதுபானக் கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க முயலுவதை அறிந்த பொதுமக்கள் நேற்று நாகுடி பேருந்து நிலையம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நாகுடியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க கோரி நாகுடியில் நாகுடி -களக்குடி நாகுடி ஊராட்சித் தலைவர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : store ,Tasmac ,Nagudi Arunachalpuram ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!