×

எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

பொள்ளாச்சி, டிச.25: பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் எம்ஜிஆர் 33வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாலக்காடு ரோட்டில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் எம்ஜிஆர் நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டது. இதற்கு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கி, எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நகர அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் சக்திவேல், தம்புதாமோதரன், இரும்பு குரு, ஊராட்சி தலைவர் ரங்கநாதன், வீராசாமி திருநீலகண்டன், வக்கீல் சம்பத்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், பஸ் நிலையம் அருகே நகர அ.தி.மு.க. சார்பில், எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் சென்றனர். அதன்பின், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் பலரும், எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மலர்தூவி  மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜோம்ஸ்ராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரகுபதி, நகர மாணவரணி அருளானந்தம், பொருளாளர் கனகு, மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம் மற்றும் பெப்சி மகேஸ், சுப்பிரமணியம், மகாலிங்கம், மணிபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MGR Memorial Day ,
× RELATED எம்ஜிஆர் நினைவு தினம்